பாவூர்சத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பாவூர்சத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், ஹோம் சார் டபிள் டிரஸ்ட் மற்றும் கண்தான விழிப்புணர்வு குழ இணைந்து பாவூர்சத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திர சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு நிறுவனறுமாகிய Ln K.R.P. இளங்கோ அவர்கள் தலைமை தாங்கினார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் செயலாளர் Ln T.சுரேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் Ln Dr.K.S. சினேகா பாரதி அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கலந்துகொண்ட ஏழைகளுக்கு சேலை, மதிய உணவு மற்றும் அனைவருக்கும் 5 கிலோ அரிசி, கண்தான விழிப்புணர்வு சுற்றறிக்கை ஆகியவை வழங்கப்பட்டன. பொருளாளர் Ln S. பரமசிவம் அவர்கள் நன்றியுரை கூறினார்.