தொடரும் மழை: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2021-07-23 02:33 GMT

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. தென்காசி, குற்றாலம், கடையம், செங்கோட்டை, கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதலே சாரல் மழை பெய்து வந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேரருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். விரைவில் குற்றால அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News