தென்காசி வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவு

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2021-09-24 05:30 GMT

தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் அமமுக செயலாளரும் இன்றைய அமைப்புச் செயலாளருமான பொய்கை மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அமமுக அமைப்பு செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், அமமுக மாவட்ட  அவைத்தலைவர் பெருமையா பாண்டியன், பொன்னுசாமி கடையநல்லூர் நகர செயலாளர் ஜமாலூதீன், செங்கோட்டை நகர செயலாளர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமசாமி ஆகியோர் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News