தென்காசி: இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் எம்எல்ஏ பழனி நாடார்

Medical Camp - தென்காசி மாவட்டம் நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

Update: 2022-06-28 01:15 GMT

இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்த தென்காசி எம்எல்ஏ பழனி நாடார்.

Medical Camp -தென்காசி மாவட்டம் நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவரும், நகர் மன்ற உறுப்பினருமான ரபீக் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உள்ளிட்ட ஏராளமான நோய்களுக்கு மருத்துவர்கள் மருந்து அளித்தனர்.

முகாமில் நகர்மன்றத் தலைவர் சாதிர், நகர்மன்றத் துணைத் தலைவர் சுப்பையா, தென்காசி நகர தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான காதர் மைதீன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஜோதிடர், மாவட்ட பொதுச் செயலாளர் காஜா மைதீன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News