தென்காசி: வரும் வெள்ளிக்கிழமை விவசாயி குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை விவசாயி குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.05.2022 அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.