தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 95.28 சதவீதம் பேர் தேர்ச்சி

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 16705 பேரில் 15916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2022-06-20 10:45 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 95.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 16705 பேரில் 15916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம் மாவட்டத்தில் மாணவர்களை விட விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 92.61 சதவீதமும், மாணவிகள் 97.69 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7933 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7347 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.61 சதவீதமாகும். 8772 மாணவிகள் தேர்வு எழுதியதில் 8569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.69 சதவீதமாகும். மொத்த தேர்ச்சி விகிதம் : 95.28%

Tags:    

Similar News