தென்காசி மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள அனுமதி
பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் (நகர்புறம்) ரூ. 145.80 இலட்சம் மதிப்பீட்டில் 10 திட்டங்களுக்கு அனுமதி
தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் (நகர்புறம்) ரூபாய் 145.80 இலட்சம் மதிப்பீட்டில் 10 திட்டங்களில் அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தில், திட்ட மதிப்பீட்டில் 33% மட்டுமே பொது மக்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையினை அரசு வழங்கும்.
நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் மேற்கொள்வதற்கு, பொது மக்கள்பங்களிப்பு தொகையினை சம்மந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தில் வரைவோலையாகவோ / மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தி உரிய விவரங்களை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.