தென்காசி 27வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் காதர் மைதீன் தீவிர வாக்கு சேகரிப்பு

தென்காசி நகராட்சியில் 27வது வார்டில் போட்டியிடும் நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன் நேற்று மாலை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

Update: 2022-02-09 04:30 GMT

தென்காசி நகராட்சியில் 27வது வார்டில் போட்டியிடும் நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன் நேற்று மாலை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தற்போது பிரச்சார களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாலை நேரங்களில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி நகராட்சியில் இருபத்தி ஏழாவது வார்டு பகுதியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் நேற்று மாலை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தங்கள் அப்பகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது தென்காசி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News