தென்காசி 27வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் காதர்மைதீன் தீவிர வாக்கு சேகரிப்பு
தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று தென்காசி 27 வது வார்டு காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன் தீவிர வாக்கு சேகரிப்பு
தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் இறுதி நாளான இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் 27 வது வார்டில் போட்டியிடும் தென்காசி காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உடன் இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சந்தோஷ், சித்திக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.