தென்காசி மாவட்டத்தில் வித்தியாசமாக பதவி ஏற்பு விழா நடத்திய ஊராட்சி தலைவர்கள்

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் வித்தியாசமான முறையில் பதவி ஏற்பு

Update: 2021-10-21 11:49 GMT

பெரியபிள்ளை வலசை கிராம ஊராட்சி தலைவர் வேலுச்சாமி இசைக் கச்சேரி நடத்தி பதவியேற்பு 

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் சில வித்தியாசமான சம்பவங்களும் நடந்தேறியுள்ளது.

பெரிய பிள்ளை வலசை கிராம பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி இசைக் கச்சேரி நடத்தி பதவியேற்பு விழாவை அமர்க்களப்படுத்தி இருந்தார். பதவியேற்ற கையோடு ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார்.

ஆலங்குளம் ஒன்றியம் அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள பூலாங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரவிய கனிக்கு கிராம மக்கள் கரன்சி பரிசு அளித்தனர். புடவையில் குத்தப்பட்ட பணத்துடன் அவர் பதவி ஏற்றார்.

Tags:    

Similar News