யுபிஎஸ்சி தேர்வில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி: எம்பி கனிமொழி வாழ்த்து

யுபிஎஸ்சி தேர்வில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2021-09-28 11:15 GMT

யுபிஎஸ்சி தேர்வில் தென்காசியை சேர்ந்த சண்முகவல்லி பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்திற்கு தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று சண்முகவல்லிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், மூர்த்தி, மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News