அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலவிடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு

Update: 2021-11-10 04:31 GMT

தென்காசி கலெக்டர் கோபால சுந்தர ராஜ் 

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலவிடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 29 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த  விடுதிகளில் மாணவர், மாணவியர் சேர்க்கை பெற உயர்த்தப்பட்ட வருமான வரம்பை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும்  இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலரை 8344280895 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News