தென்காசியில் ஓய்வு பெறும் ஊர்க்காவல் படை காவலரை எஸ்பி கெளரவிப்பு

தென்காசி மாவட்டம் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரை கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Update: 2021-11-30 13:45 GMT

அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படை பிளட்டோன் கமாண்டன்ட் மாணிக்கவாசகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரை கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசி மாவட்டம், காவல்துறையின் பக்கபலமாக செயல்பட்டு வரும் ஊர்க்காவல் படையினர், காவல் துறையுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது, இரவு பகல் பாராமல் காவல்துறையினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுவது, கொரோனா தாக்கம் அதிகளவில் இருந்தபோதும் காவல் துறையினருடன் சேர்ந்து பொது மக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்து நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த பெரிதும் பங்களிப்பினை அளித்தனர்.

இந்நிலையில் 26/04/2001 ல் ஊர்க்காவல் படை பணியில் சேர்ந்து பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 30/11/2021 ல் இன்று பணி ஓய்வு பெறும் அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படை பிளட்டோன் கமாண்டன்ட் மாணிக்கவாசகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டு தெரிவித்தது மகிழ்ச்சியாக இருப்பதாக ஊர்க்காவல் படை பிளட்டோன் கமாண்டன்ட் கூறினார்.

Tags:    

Similar News