சிவந்தி ஆதித்தனார் 87வது பிறந்தநாள் விழா
சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாள் விழா, இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுவதும், சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாள் விழா, இன்று கொண்டாடப்படுகிறது. தென்காசியில் இன்று சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, காசி விஸ்வநாதர் ஆலயத்தில், இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு, இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பாக, பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டது.