தொடர் மழையால் தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு, நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-25 14:30 GMT

தென்காசி மாவட்டத்தில்,  தொடர் கனமழை காரணமாக நாளை வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும்,  பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மழை மற்றும் வெள்ளை இடர்பாடுகள் தொடர்பான உதவிக்கு, 24 மணி நேரமும் இயங்கி வரும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633-290548 ஆக எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News