ஊரக உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் திமுகவினர் விருப்ப மனு
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் இடம் விருப்ப மனு பெறப்பட்டது.
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே திமுக கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருவாய் துறை அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.கே.எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.