பைக்கில் வைத்திருந்த ரூ.1.29 ஆயிரம் கொள்ளை: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

சுரண்டையில் பட்ட பகலில் பைக்கில் வைத்திருந்த ரூ 1.29 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-02-10 01:36 GMT

சுரண்டையில் பைக்கில் வைத்திருந்த ரூ.1.29 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சுரண்டையில் பட்ட பகலில் பைக்கில் வைத்திருந்த ரூ 1-29 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகராஜ் மகன் ஜெய் கணேஷ் (38). இவர் அவரது அண்ணனுடன் இணைந்து ஒலி பெருக்கி அமைத்து வருகிறார். ‌‌நேற்று மதியம் இவர் காமராஜர் நகரில் உள்ள அரசு வங்கியில் நகையை அடகு வைத்து ரூ 1.30 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ‌‌அதில் ரூ 1.29 ஆயிரத்தை எடுத்து அவரது பைக்கில் வைத்து வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார்.‌

இந்நிலையில் ஜெய் கணேஷ் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் மீதி பணம் வங்கி கணக்கில் உள்ளதா என செக் பண்ண சென்றுள்ளார். அதை பயன்படுத்திய மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் வைத்திருந்த ரூ.1.29 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு மாயமானார்.

இது குறித்து உடனடியாக அவர் சுரண்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபரை தேடி வருகின்றனர். பட்டபகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News