ராகுல்காந்தி பூரண நலம் பெற வேண்டி பிரார்த்தனை

Update: 2021-04-22 04:30 GMT

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பூரண நலம் வேண்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் பாதிப்படைந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் அவர் உடல் நலம் பெற வேண்டி தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் பழனி நாடார் தலைமையில் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காதர் வட்டார தலைவர் பெருமாள் மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் சுப்பையா நாடார் நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ், சுப்பிரமணியன், ஆறுமுகம், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News