தென்காசி மாவட்டத்தில் டிச.18ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் டிச.18ம் தேதி (சனிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-12-16 13:41 GMT

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் தென்காசி இணைந்து நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 18.12.2021 அன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சங்கரன்கோவிலில் வைத்து நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் ((www.tnprivatejobs.tn.gov.in)) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் TENKASI EMPLOYMENT OFFICE  என்ற Telegram Channel--ல் இணைந்து பயன்பெறலாம்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News