சைபர் கிரைம் குற்றம் தடுக்க போஸ்டர் ஒட்டி போலீசார் விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல்துறையினர், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து போஸ்டர்கள் ஒட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2021-10-04 01:45 GMT

தொழில் நுட்ப வளர்ச்சியால், நாளுக்குநாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரிலும் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுறுத்தலின் பேரிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான. ஏ.டி.எம் , பேருந்து நிலையங்கள், கோவில்கள், பலசரக்குக் கடைகள் ஆகிய பகுதிகளில், சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும், இணையதளம் மூலமாக பண மோசடி நடைபெற்றால் 155260 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு  வருகின்றன.

Tags:    

Similar News