தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பாமக கொடியேற்று விழா

தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2022-01-17 01:30 GMT

தென்காசியில் நடைபெற்ற பாமக கொடியேற்று விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள். 

தை திருநாளை முன்னிட்டு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி மற்றும் பா.ம.க தலைவர் ஜிகே மணி ஆகியோரின் உத்தரவின்படி தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்டத்தில், செங்கோட்டை, ஆய்க்குடி, நெடுவயல், அச்சன்புதூர், பார்வதிபுரம், குமந்தாபுரம். ஆகிய பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு,  கட்சிக்கொடியை ஏற்றினர்.

இதேபோல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடிகளை அந்தந்த பகுதி நிர்வாகிகள் கொடி ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஐய்யம்பெருமாள் பிள்ளை, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் மற்றும் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் பொ. இசக்கிமுத்து மற்றும் மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், செங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி,  மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வேம்பு ராஜ், செங்கோட்டை நகர செயலாளர் அபு, பாலகிருஷ்ணன், அச்சன்புதூர் பேரூர் செயலாளர் அரசப்பதேவர் மற்றும் ஆய்க்குடி பகுதி நிர்வாகிகள் தண்டபாணி, பரமசிவம், உட்பட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News