தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-05-10 02:00 GMT

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன் உதவித் தொகை, தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 503 மனுக்கள் பெறப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்கள் என்பதை விசாரனை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரார்களுக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஷேக் அப்துல் காதர் உதவி இயக்குநர் ஊராட்சிகள் பிரான்சிஸ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News