ஒண்டி வீரன் நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை

ஒண்டி வீரன் 250 வது நினைவு தினத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Update: 2021-08-18 07:00 GMT

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ். 

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு ஆண்டும் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் ஆகஸ்ட் 20 ம் தேதி அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை ஒட்டி தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் உள்ள நினைவிடத்திறகு, தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் வெளிமாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News