புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பழனி நாடார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-05-12 04:45 GMT

தென்காசி அருகே துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மேலப்பாவூர் 30 லட்சம் மதிப்பீட்டில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 8 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் சாக்ரடீஸ், கீழப்பாவூர் ஒன்றிய பெருந்தலைவர் காவேரி, மேலப்பாவூர் ஊராட்சி மன்ற தலைவர் சொள்ள முத்து மருதையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News