தென்காசியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராஜேந்திரன் பிரச்சாரம்
தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராஜேந்திரன் பிரச்சாரம் செய்தார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தேமுதிக தனித்து களம் காண்கிறது. தென்காசி மாவட்டத்தில், முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
தேமுதிக சார்பில், தென்காசி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ரமேஷ், ஏழாவது வார்டு பகுதிக்கு சரோஜா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, தேமுதிக கட்சியை சார்ந்த, நடிகர் ராஜேந்திரன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் தேதிமுக ஒன்றிய செயலாளர் வேலாயுத பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.