தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் ஆய்வு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-12-18 01:15 GMT

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

தென்காசி மாவட்ட காவல் அலுவலகம், தனிப்பிரிவு அலுவலகம், மாவட்ட குற்ற ஆவண காப்பகம், நிலம் அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு , தொழில்நுட்ப பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மாவட்ட கட்டுப்பாட்டு அறை, மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு மையம், சமூக ஊடகப் பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மையம், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையம், ஆயுதப்படை போன்ற அனைத்தையும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு  ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் புதிதாக துவங்கப்பட்டுள்ள,  தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் பிரிவு சிறப்பாக செயல்படுவதாக வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உடனிருந்தார். 

Tags:    

Similar News