தென்காசி மாவட்டத்தில் தீபாவளியன்று விதி மீறியதாக 208 வழக்குகள் பதிவு

தென்காசி மாவட்டத்தில் தீபாவளி நாட்களில் விதி மீறலில் ஈடுபட்டதாக 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-11-07 16:29 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் தீபாவளி அன்று எந்த ஒரு அசம்பாவித சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 01.11.2021 முதல் 04.11.2021 ஆகிய நான்கு நாட்களில் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக பொது இடங்களில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசுகளை வெடித்ததாக 39 வழக்குகள் பதிவு செய்யபட்டு 40 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மது அருந்திவிட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக 169 மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 151 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News