தென்காசி: வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தென்காசி மாவட்ட வாக்குச்சாவடிகளில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-10-06 07:45 GMT

.வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட, மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், முதற்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்திற்கு,  மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று தேர்தல் நடைபெறும் ஐந்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடமும், வாக்களிக்கும் வாக்காளர்களும் செய்து தரப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மக்கள் உதவி தொடர்பு அலுவலர் லெனின் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News