தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு: மாவட்ட எஸ்பி தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தொடக்கி வைத்தார்

Update: 2022-10-02 04:30 GMT

தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பொருளாதார குற்ற பிரிவில் நாகர்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு)  குமரேசன் தலைமையில் காவல் ஆய்வாளர் ரோஸ்லின் சேவியோ மற்றும் 04 காவலர்களைக் கொண்டு இப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.பொருளாதார ரீதியான குற்றங்களை விரைவில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வண்ணம் இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது.

Tags:    

Similar News