தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-14 02:15 GMT

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபியை இழிவுபடுத்திப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மவுண்ட் ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர் முஹம்மது மைதீன் ராசப்பா மற்றும் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு செயலாளர் தென்காசி முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசையும் பாஜக வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், மதிமுக செயலாளர் வெங்கடேஸ்வரன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயுப் கான், முகம்மது நயினார், நகர்மன்ற உறுப்பினர்கள் ரபீக் அன்சாரி, நாகூர்மீரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News