மத்திய அரசை கண்டித்து தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
Demonstration on behalf of the Congress party in Tenkasi condemning the central govt
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமலாக்கத்துறை ஹரால்டு வழக்கு சம்பந்தமாக ராகுல் காந்திக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி வணிகவரித்துறை அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமை வகித்தார். இதில் அமலாக்கத்துறை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், வட்டார தலைவர் பெருமாள், நகர தலைவர் காதர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரபீக், உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.