தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்த செயல் விளக்கம்

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக உரம் தெளிப்பது பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.

Update: 2022-03-16 05:46 GMT

தென்காசி வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

தென்காசி மாவட்டம் கிள்ளிக்குளம் பகுதியில் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் இன்று கீழப்புலியூர் பகுதி விவசாயிகளுக்கு 4ம் ஆண்டு மாணவிகள் நெற்பயிர்களுக்கு இயற்கை மருந்து தெளிப்பது மற்றும் இரசாயன மருந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

இதுகூறித்து அக்கல்லூரி மாணவிகள் கூறுகையில்

தங்கள் கல்லூரி வாயிலாக உரங்கள், எதிர் நுண்ணுயிரி உள்ளிட்ட 7 வகையான விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் இயற்கை முறையில் தயார் செய்து வருகிறோம். இதில் இன்று பாக்டீரியா எதிர் நூண்ணுயிரி திரவம் மற்றும் திடவடிவில் உள்ளது. இதனை எவ்வாறு விளை நிலங்களுக்கு பயன்படுத்துவது என்றும், இதனை பயன்படுத்துவதால் மண்ணுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் செயல்விளக்கம்கொடுத்து வருகிறோம் என்றனர்.

இந்நிகழ்ச்சியில் பயிர் நோயியல் துறை உதவி பேராசியர் ரஜினி மாலா, விவசாய சங்க தலைவர் பெரியசாமி மற்றும் மாணவிகள் , விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News