தென்காசி பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தினமும் நீர் மோர் விநியோகம்

Update: 2022-03-26 06:30 GMT

தென்காசி 23 வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தலைமையில் இசக்கி அம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

தென்காசி 23 வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தலைமையில் இசக்கி அம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. தென்காசி பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் குத்தாலிங்கம் நகர பொதுச்செயலாளர் ராஜ்குமார் 87 வதுகிளை தலைவர் ராஜசேகர் 23 வது வார்டு தலைவர் கார்த்திக் சீனிவாசன், முருகன், ரகுபதி, ராதா, சுதர்சன், மகேஸ்வரி, கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வரும் கோடை காலம் முழுவதும் தினசரி மதியம் நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என 23 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தெரிவித்தார்.

Tags:    

Similar News