தென்காசி நகராட்சி தேர்தலுக்காக நகர பாஜக.,வினர் விருப்ப மனு
தென்காசி நகர பாஜக சார்பில் நகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக நகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி யோகா டவரில் நடைபெற்றது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராமராஜாவிடம் தென்காசி நகர தலைவர் குத்தாலிங்கம் மனைவி முத்துலட்சுமி, தென்காசி நகர 8வது வார்டில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அன்புராஜ் பொதுச் செயலாளர் ராஜேஷ் ராஜா சுப்பிரமணியன் பாண்டித்துரை, தென்காசி நகர தலைவர் குத்தாலிங்கம் பொதுச் செயலாளர் ராஜ்குமார், துணைத்தலைவர் ஜானகி மந்திரமூர்த்தி, தொடலை ராஜ் சேகர், மாரியப்பன், ராஜ்குமார், சங்கர், கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் ராமநாதன் ராமச்சந்திரன் பிரபா ரி முருகன், கிளை தலைவர்கள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்