சுரண்டையில் இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

சுரண்டையில் இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2023-12-22 02:52 GMT

பட விளக்கம்: நகராட்சி அலுவலகம் முகப்பு படம்.

தென்காசி மாவட்டம்,  சுரண்டை நகராட்சியில் இன்று முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் காலை 10 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வார்டு எண் 10 11 12 25 26 27 ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கீழச்சுரண்டை குறிஞ்சி மயில் மண்டபத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கம்பங்கள் மாற்றம், பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, நில அளவீடு, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை, மூன்றாம் பாலினம் உதவித்தொகை, கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி, குடிநீர் வரி, பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வழங்குதல், தண்ணீர் இணைப்பு ,வாறுகால் இணைப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி, காலி மனை வரிவிதிப்பு ஆகிய சேவைகளை பெற்று சிறப்படையுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

இன்று சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News