சுரண்டை இரட்டைகுளத்தில் முதியவர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

சுரண்டை இரட்டைகுளத்தில் முதியவர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-12-18 00:00 GMT

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை யாதவர் நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்னையா நம்பியார் மகன் ஆனைக்கண்ணு நம்பியார் (வயது 70). இவர் அவருக்கு சொந்தமான மாடுகளை மேய்த்து வருகிறார்.  தனது மாடுகளை வழக்கம் போல மேய்க்க சாம்பவர் வடகரை ஊரின் கீழ்புறம் உள்ள குலையநேரி கிராம எல்லையில் மேய்த்து வந்துள்ளார்.

இரவில் வெகுநேரமாகியும் மாடுகள் மேய்ந்து தானாக வீட்டுக்கு வந்த நிலையில், ஆனைக்கன்னு நம்பியார் வராததால் உறவினர்கள் தேடிச்சென்று அவர் வழக்கமாக செல்லும் வழியில் தேடியுள்ளனர். ஆனால் குளத்து கரையில் அவரின் செருப்பு மற்றும் துண்டு மட்டும் இருந்துள்ளது. இதனால் இது குறித்து உறவினர்கள் போலீசாருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இரவு தேடிய நிலையில் அவரை கண்டறிய இயலவில்லை.

இந்நிலையில் நேற்று காலை  ரெட்டைகுளத்தில் மிதந்த நிலையில் ஆனைக்கண்ணு நம்பியார் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சுரண்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News