உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தென்காசியில் ரத்த தான முகாம்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தென்காசியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

Update: 2022-06-14 12:53 GMT

தென்காசியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தென்காசியில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் விடிஎஸ்ஆர் சில்க்ஸ் நிறுவனம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

ரத்ததானம் வழங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக நடந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். விடிஎஸ்ஆர் சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ரகுமான்கான், இம்ரான்கான் முன்னிலை வகித்தனர். ஐக்கிய ஜமாத் பொருளாளர் ஐ ஷேக் மன்சூர் வரவேற்றார்.முகாமில் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் பாபு தலைமையில் சுதா, பொற்செல்வி, ஹரி மருத்துவ குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர். முகாமில் 15க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விடிஎஸ் ஆர் சில்க்ஸ் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News