குற்றாலம் அருவியை திறக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 23.10.21. அன்று குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-10-15 14:38 GMT

குற்றாலம் அருவிகளில் பொதுமக்களை குளிப்பதற்கு அனுமதி வேண்டி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது கொரோனா தொற்று குறைந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலாத்தலங்கள் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. 

ஆனால் இதுவரை குற்றாலம் அருவிகளில் பொதுமக்களை குளிக்க அனுமதி வழங்காமலும் பேரூராட்சிக்கு சொந்தமான குத்தகை இனங்களின் இரண்டு ஆண்டுக்கான குத்தகை தொகை இணையும், திருக்குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான கடைகளின் இரண்டு ஆண்டுக்கான குத்தகை தொகை இணையும் இதுவரை ரத்து செய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தி தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 23.10.21. அன்று காலை 11 மணி அளவில் குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Tags:    

Similar News