தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை உபமின்நிலையங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-03 08:11 GMT
பைல் படம்

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை உபமின்நிலையங்களில் 04.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின்நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்க்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் மதியம் 01:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தென்காசி உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், இராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம்.

செங்கோட்டை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு.

சுரண்டை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம்.

சாம்பவர்வடகரை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: சாம்பவர் வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C.பொய்கை, துரைச்சாமிபுரம்.

Tags:    

Similar News