தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக ஆகாஷ் பாெறுப்பேற்பு

New Collector Name -தென்காசி மாவட்டத்தின் 4வது ஆட்சித் தலைவராக ஆகாஷ் IAS இன்று பாெறுப்பேற்று கொண்டார்.

Update: 2022-06-16 06:05 GMT
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்.

New Collector Name - தென்காசி மாவட்டத்தின் 4வது ஆட்சித் தலைவராக ஆகாஷ் IAS இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

தென்காசி மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்த கோபாலசுந்தர்ராஜ் வணிகவரித்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை பெருநகர நீர்வளத்துறை இயக்குனராக இருந்த ஆகாஷ் தென்காசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். புதிதாக துவங்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் இதுவரை அருண் சுந்தர் தயாளன், சமீரன், கோபாலசுந்தர்ராஜ் ஆகியோரைத் தொடர்ந்து 4வது ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஆகாஷ் ஐ.ஏ.எஸ். இன்று காலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் பொறுப்புகளை ஒப்படைத்தார். அவருக்கு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியின் போது கூறியதாவது:- நான் ஏற்கனவே ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவியில் உதவி ஆட்சியராக பணியாற்றி இருப்பதால் இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் எனக்கு பரிட்சமானது. இங்குள்ள அதிகாரிகளும் தெரிந்தவர்கள் என்பதால் சிறப்பான பணி மேற்கொள்ள முடியும் இவ்வாறு அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News