குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் வெற்றி

இந்த தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்காக முன் ஏற்பாடாக பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது

Update: 2022-05-25 08:46 GMT

வெற்றி பெற்ற அதிமுகவின் கணேஷ் தாமோதரன்

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கடந்த 19.02.22 அன்ற நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் குற்றாலம் பேரூராட்சியில் திமுக சார்பில் 4 உறுப்பினர்களும் அதிமுக சார்பில் 4 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் 26.03.22 ல் நடைபெற்ற மறை முக தேர்தலின்போது அதிமுக 4 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர்.  திமுகவினர் வராத நிலையில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.  பின்னர் 29.04.22 அன்று தேர்தல் நடைபெற்றது .அதிலும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் கடைசி வரை அதிமுகவினர் மட்டுமே வந்திருந்தனர்.

இதனால் தேர்தல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது .தற்போது குற்றாலத்தில் சீசன் களை கட்டி உள்ள நிலையில், இன்று இந்த தேர்தல் நடந்து வருகிறது. திமுக 4 உறுப்பினர்களும் அதிமுக 4 உறுப்பினர்களும் கலந்து கொண்டதால், தலைவர்,  துணை தலைவர் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் சுமூகமாக நடைபெற முன் ஏற்பாடாக பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. குற்றாலம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள விஸ்வனாத ராவ் பூங்காவில் கூட இன்று சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து 5 வாக்குகள் பெற்று அதிமுகவின் கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றுள்ளார்

Tags:    

Similar News