செப்.26 -ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நடைபெற உள்ளது

தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு குறைத்தீர் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது

Update: 2022-09-23 16:00 GMT

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 26.09.2022 அன்று காலை 11:00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.

இது தொடர்பாக  தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்  வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள்,அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 26.09.2022 அன்று காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகையான தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், குடும்ப அட்டை-நகல், ஆதார் அடடை-நகல், வாக்காளர் அட்டை - நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News