75வது சுதந்திர அமுத பெருவிழா: சங்கரன்கோவில் எம்எல்ஏ பங்கேற்பு

75வது சுதந்திர அமுத பெருவிழா சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டார்.

Update: 2022-05-20 05:15 GMT

தென்காசியில் நடைபெற்ற சுதந்திர தின பெருவிழா.

தென்காசியில் 75வது சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழா கண்காட்சியில் பங்கேற்ற சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா துறை சார்ந்த நிகழ்வுகளை பார்வையிட்டார். தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் 75 வது சுதந்திரத்திருநாள் அமுத பெரு விழா முன்னிட்டு பல்துறை பணி விளக்க கண்காட்சி 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியில் காவல்துறை சார்பில் அதி நவீன துப்பாக்கிகள், வேளாண்துறை சார்பில் விவசாயத்திற்கு தேவையான நவீன இயந்திரங்கள், இடு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் குழுக்கள் சார்பில் இயற்கை உணவுகள், தீயனைப்பு சார்பில் மீட்புபணி உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதில் மாணவ மாணவிகளுக்கு துறை சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டார்.

தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வன்கொடுமை, இலவச வீட்டு பட்டா வழங்குதல் உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நடனம், விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News