பாவூர்சத்திரம் அருகே கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கைது

பாவூர்சத்திரம் அருகே நகைகள் மற்றும் பணம் கொள்ளை சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-15 12:06 GMT

கைது செய்யப்பட்ட 6 பேர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனூர் என்ற கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியர் அருணாசலம் என்பவர் வீட்டில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் 100 பவுன் தங்க நகைகளும் 10 லட்ச ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடித்தனர்.

இந்த சம்பவத்தில் தற்போது ஆறு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 50 பவுன் நகைகளும் மூன்றரை லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாவூர்சத்திரம் காவல் துறையினர் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் கூட்டாளிகளான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் விமல் சதீஷ், சென்னை பச்சரபாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், கமல்ராஜ், வாஜாத் அலி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லுசாமி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News