தென்காசியில் ரூ.1.20 லட்சம் நகை திருட்டு சம்பவம்: 2 பேர் கைது
தென்காசியில் ரூ.1.20 லட்சம் நகை திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலையத்திற்குட்பட்ட மலையான் தெருவில் வசித்து வருபவர் முப்புடாதி. இவர் கடந்த 15ம் தேதி கடைக்கு சென்ற போது பீரோவை உடைத்து சுமார் 24 கிராம் எடை கொண்ட தங்கச் செயினை யாரோ திருடி விட்டதாக கொடுத்த புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில், தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பகராஜா, தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ், காவலர் செளந்தர், பராக்கிரம பாண்டி தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மலையான் தெருவை சார்ந்த முத்துமாலை என்பவரது மகன் பால செல்வகணேஷ் 17, மற்றும் களக்கோடி தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் விவேக் 24 ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,20000 ம் மதிப்புள்ள தங்க செயின் மீட்கப்பட்டது.