தென்காசி மாவட்டத்தில் அரசு விதிமுறைகள் படி கடைகளை திறக்கலாம்-அதிகாரிகள் தகவல்

சுரன்டை : அரசு விதிமுறைகளை படி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-06-06 12:16 GMT

துஅரசு விதிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்க அனுமதி : ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக அரசு நாளை முதல் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. பெரிய கடைகள் தவிர பல வணிக நிறுவனங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது. வீீகேபுதூர் தாசில்தார் வெங்கடேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர்கலந்து கொண்டனர்.

கடைகளை அரசு கூறிய விதிமுறைகளின்படி திறக்க வேண்டும் எனவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து அதனை தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டது. கூட்டத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News