தென்காசி-விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு,வாகனங்கள் பறிமுதல்.
முககவசம் அணியாத 345 நபர்கள்,சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 66 வாகனங்கள் பறிமுதல்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுதலை தடுக்க தமிழக அரசால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று அத்தியாவசியத் தேவையின்றி அலட்சியமாக, முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 345 நபர்கள் மீதும்,சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...