இந்தியாவை மாற்ற நினைக்கிறார் மோடி-ராகுல்காந்தி

Update: 2021-03-01 05:00 GMT

பிரதமர் மோடி ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே ஒரு வரலாறு என இந்தியாவை மாற்ற நினைக்கிறார் என தென்காசியில் ராகுல்காந்தி பேசினார்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மக்கள் முன்னிலையில் தேர்தல் பரப்புரை ஆற்றினார்.இந்தியாவில் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என மோடி பேசி வருகிறார். தமிழக வரலாறு இந்திய வரலாறு இல்லையா, தமிழ்மொழி இந்திய மொழி இல்லையா, தமிழர்களின் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் இல்லையா? பிரதமர் மோடி ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே ஒரு வரலாறு என இந்தியாவை மாற்ற நினைக்கிறார்.தமிழக முதல்வர் ஊழலின் உருவமாக இருக்கிறார். அதனால் தான் பிரதமர் மோடியிடம் தலை குனிந்து நிற்கிறார்.

தமிழ்நாட்டை மோடி, அதிமுக ஆட்சி மூலம் கண்ட்ரோல் செய்கிறார்.சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி வரி மிகப்பெரிய சாபமாக இருக்கிறது.பணமதிப்பிழப்பு விவகாரம் சிறு குறு தொழில்கள் செய்யும் வியாபாரிகளை மிகவும் பாதித்துள்ளது.கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு இவையெல்லாம் மக்களின் சேமிப்பு லாபத்தை பணக்காரர்களுக்கு கொண்டு செல்லும் விதமாக உள்ளது எனவும் பேசினார்.

Tags:    

Similar News