சங்கரன் கோவிலில் பறக்கும் படை சோதனை ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆவணமின்றி ரூ. 60 ஆயிரம் எடுத்துச் சென்ற மாட்டு வியாபாரியிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-14 05:27 GMT

தென்காசி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ராஜபாளையம் சாலையில் குருவிகுளம் பிடிஓ சிவகுமார் தலைமையிலான பறக்கும் படை வாகனச் சோதனையில் ஈடுபட்டது.

இதில் அவ்வழியே வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்ட போது ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 60,000 ரூபாய் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் குருவிகுளத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர், மாட்டு வியாபாரி என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 60,000 பறிமுதல் செய்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News