சங்கரன்கோவிலில் புதிய காவல் நிலையம் திறப்பு

சங்கரன்கோவிலில் இரண்டு புதிய காவல் நிலைய கட்டிடங்களின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2021-01-22 17:30 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உட்கோட்டத்திலுள்ள சங்கரன்கோவில் நகர் காவல் நிலையம் மற்றும் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் நிலையங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி (Video Conference) மூலமாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் கலந்து கொண்டு குத்துவிளக்கு விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக புதிய காவல் நிலையங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்பித்தார்..மேலும் இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் காவல் ஆய்வாளர்கள் மீனாட்சி நாதன், மகேஸ்வரி, மங்கையர்க்கரசி, மார்டின் மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News